2026 மே 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா விளையாட்டுக்கழகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து வருடந்தோரும் நடத்திவரும் இரத்த தான நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் இணைப்பாளர் மேஜர் கமால் முனசிங்க உட்பட அதிதிகள் பலர் கொண்டனர்.

இதன்போது பொதுமக்கள், படையினர், பொலிஸார், விமானப்படையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதாக இதன் ஏற்பாட்டாளரான சாண்டோ இ.இராஜரெட்னம் தெரிவித்தார்.

இந்த இரத்ததான முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .