2026 மே 14, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக தோணியில் போக்குவரத்து

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை  மழையைத் தொடர்ந்து  படுவான்கரைப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, றாணமடு போன்ற கிராமங்களுக்குச் செல்லும் பிரதான போக்குவரத்து
மார்க்கம் தடைப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தோணியின் மூலம் போக்குவரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அப்பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியினூடாக வெள்ளம் பாய்வதனால்  பிரதான போக்குவரத்து மார்க்கம் தடைப்பட்டுள்ளது. 

இதேவேளை, கடும்  மழை காரணமாக காக்காச்சுவட்டை கிராமத்திற்குச் செல்லும் மருதங்குடலை வீதியினுள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவ்வீதியினூடாக பயணம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .