2026 மே 14, வியாழக்கிழமை

புனித அல்குர்ஆன் பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  புனித அல்குர்ஆனை  எட்டுவயதிற்குள் முழுமையாக ஓதி முடித்து அல்குர்ஆன் போட்டிப் பரீட்சையில் மிகத்திறமையாக சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 52 குர்ஆன் பாடசாலைகளைச்சேர்ந்த 736 ஆரம்பப்பிரிவு மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி  குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்திச்சபையின்  ஏற்பாட்டில்  அபிவிருத்தி சபையின் தலைவர் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், புனித அல்குர்ஆனைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரகள், குர்ஆன் அபிவிருத்தி சபை மூத்த உறுப்பினர்கள், உட்பட சமுகப் பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .