2026 மே 14, வியாழக்கிழமை

dd

முஸ்லிம் எயிடினால் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கல்

Super User   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் சுமார் 500 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் அண்மையில் இலசமாக  வழங்கப்பட்டுள்ளன.

முட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கே இந்த அப்பியாச கொப்பிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இரண்டாவது மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான 'யாவருக்கும் ஆரம்ப கல்வி' எனும் திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள வசதி குறைந்த பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை உறுதி செய்யும் நோக்கிலேயே முஸ்லிம் எயிட்டினால் பல உதவிகள் வழங்கி வருகின்றனது.

முன் பள்ளிகளை அமைத்தல் அல்லது கல்வியை தொடங்குவதற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதன் மூலம் புதிய தலைமுறையினருக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்து கொடுக்க முஸ்லிம் எயிட் விழைகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .