2026 மே 09, சனிக்கிழமை

காத்தான்குடி கல்வி கோட்டத்தில் இரு புதிய பாடசாலைகள் ஆரம்பம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி கல்வி கோட்டத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படட்டன.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை மற்றும் பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் ஆகிய இரண்டு புதிய ஊட்ட பாடசாலைகளே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்கா மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.செயினுதீன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலைகள் இரண்டும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளை கொண்டு இயங்கவுள்ளன.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இவ்வாண்டு 5 புதிய ஊட்டப் பாடசாலைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .