2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை விநியோகம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை விநியோகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பயணாளிகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை விநியோகத்தினை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மற்றும் காத்தான்குடி பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 200 ரூபாவாக இந்த மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • meenavan Sunday, 19 February 2012 05:27 PM

    மட்டகளப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை விநியோகம் என்றால் அம்பாறை மாவட்டத்தில் அந்த நடைமுறை எப்போது அமுலுக்குவரும்? நமது பிரதிநிதிகள் என்ன செய்கின்றனர் சிலவேளை அப்படி நிவாரண முத்திரை பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையென்று தூங்குகிறார்களோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .