2026 மே 09, சனிக்கிழமை

dd

பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

இலங்கையிலுள்ள பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் ஸமான் இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பங்களாதேஸ் நாட்டுத்தூதுவர் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது மட்டக்களப்பு நகரின் தற்போதைய நிலைமை மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாகவும் மக்களின் நிலைமை தொடர்பாகவும் மாநகர மேயரிடத்தில் பங்களாதேஸ் நாட்டுத்தூதுவர் கேட்டறிந்து கொண்டார். இதன்போது மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதனும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .