2026 மே 09, சனிக்கிழமை

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் கூட்டுறவுச்சங்க அங்குரார்ப்பண ஒன்று கூடல்

Kogilavani   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் கூட்டுறவுச்சங்க அங்குரார்ப்பண ஒன்று கூடல் வைபவம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

வர்த்தக கூட்டுறவு அமைச்சின் உதவியுடன் நெக்டோ நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இந்த வைபவத்தில் உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி.எம்.சரீப், நெக்டோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.ஒக்காஸ், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வ.குலசேகரம், சங்கத்தின் ஆலோசகர் எஸ்.மாமங்கராஜா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட முக்கியஸ்த்தர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் கூட்டுறவுச்சங்கங்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .