2026 மே 02, சனிக்கிழமை

கட்டுமுறிவு குளத்தில் மீன் அறுவடை

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேச பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கட்டு முறிவு குளத்தில் மீன் அறுவடை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில், எஸ்கோ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படம் இத்திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்டுமுறிவு குளத்தில் 75ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு அதற்கான அறுவடை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மிக்கெலே செசெரே, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரிதியோன், பிரதிப் பணிப்பாளர், கட்டுமுறிவு பிரதேச கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் கட்டுமுறிவு, கிரிமிச்சை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .