2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வாவியில் தொடர் சுற்றி வளைப்பு: சட்ட விரோத மீன்பிடி வலைகளும் தோணிகளும் சிக்கின.!

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு சொறுவாமுனை வாவி தொடர் சுற்றி வளைப்பில் இன்று சனிக்கிழமையும் சுமார் ஆறு இலட்ச ரூபாய் பெறுமதியான சட்ட விரோத மீன்பிடி வலைகளும் தோணிகளும் சிக்கியதாக மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் பெறுமதியான, வீச்சு வலை, தங்கூசி வலை, முக்கூட்டு வலை, இழுவை  வலை, மடி வலை, டிஸ்கோ வலை, நாய் வலை  என்பனவற்றைத் தமது கடற்தொழில் பரிசோதகரும் கடற்றொழில் கிராமிய அமைப்பினரும் இணைந்து கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத தடைசெய்யப்பட்ட மீன் பிடி வலைகள் நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க அழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய சுற்றிவளைப்பில் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர் ஏ.ஏ.பரீட், மற்றும் கிராமிய கடற்றொழில் அமைப்மைப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X