2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பில் நேற்று  சனிக்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வெள்ள நிவாரணத்திற்கான நிதி பிரதேச செயலகத்துக்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் நாளை திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படும். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு இவர்களுக்கான நிவாரணம்; வழங்கப்படுமென்று மாவட்ட அரசாங்க அதிபர் கூறியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X