2026 மே 02, சனிக்கிழமை

தெரு மின்விளக்குகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


வாழைச்சேனை பிரதேசசபை பிரிவில் இரு கிராம அலுவலகர் பிரிவுகளில் பொருத்துவதற்கான தெருமின்விளக்குகளும் அதற்கான உபகரணங்களும் பிரதேசசபை நிர்வாகத்திடம், ஆசிய அமைப்பின் நிதியுதவியில் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேசசபை பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் மீராவோடை கிராம அலுவலகர் பிரிவுகளில் தெருமின் விளக்குகள் இல்லாதுள்ளன. இந்நிலையில் இக்கிராம அலுவலகர் பிரிவுகளிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் வேண்டுகோளுக்கமைய எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் ஆசி அமைப்பின் நிதியுதவியில் இத்தெரு விளக்குகள் வழங்கப்பட்டன.

இரண்டு இலட்சம் ரூபா பெருமதியான 50 தெரு மின்விளக்ககளுக்கான பொருட்கள் கையளிக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .