2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடம், மற்றும் பார்வையாளர் மண்டபம் என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 5 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. 

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காகவே உயர்கல்வி அமைச்சர் கிழக்கு பல்கலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு பல்லைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்குப் பல்லைக்கழக பதிவாளர் எம்.மகேசன், அரசியல் பிரமுகர்கள், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், பாதுகாப்புபடை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதியின் கிழக்கு பல்கலைக்க விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .