2026 மே 07, வியாழக்கிழமை

பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி கூறவேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்தவேண்டும் என சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக காத்தான்குடி மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பிரதியமைச்சர்,
 
பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்தவேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கும் சமுகத்தின் மத்தியில் எழும் கேள்விகளுக்கும் மத்தியில் தான் நாங்கள் சமுகத்திற்காக பணிசெய்கின்றோம். அமைச்சுப் பதவிகள் ஒன்றும் எங்களுக்குப் பெரிதல்ல என்றார். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)



  Comments - 0

  • காத்தான்குடி மகன் Saturday, 18 May 2013 09:39 AM

    எல்லாவற்றையும் பொறுத்துவிட்டு, இப்போ பச்சக்குழந்தை மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே. உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?

    பட்டவர்த்தனமாக தம்புள்ளையில் பள்ளி உடைக்கப்படுவதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கே ஒண்ணுமே நடக்கல்ல என்று சொன்னவரல்லவா?

    நீங்க இதுவும் பேசுவீங்க இதற்கு மேலயும் பேசுவீங்க...

    Reply : 0       0

    vallarasu Saturday, 18 May 2013 10:10 AM

    அமைச்சரே... பொதுபல சேனா நாள்தோறும் முஸ்லிகளுக்கு ஒவ்வொரு எச்சரிக்கை விடுகிறார்களே... நீங்கள் ஊடகத்தை கூட்டி பொதுபல சேனாவுக்கு ஏதாவது ஓர் எச்சரிக்கை விட்டுள்ளீர்களா?

    Reply : 0       0

    najeeb Saturday, 18 May 2013 03:48 PM

    செம ஜோக் விடுறிங்க அமைச்சர் சார் நீங்க! அமைச்சு பதவி?????????

    Reply : 0       0

    Kanavaan Sunday, 19 May 2013 05:05 AM

    அப்பாவி முஸ்லிம் மக்களை எப்படி எப்படியெல்லாம் கதைத்து ஏமாற்றலாமோ அப்படியெல்லாம் ஏமாற்றுவதில் இந்தத் தலைமைகள் எப்போதுமே ஒன்றுபட்டுத்தான் இருப்பதோடல்லாமல் வ‌ல்லர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நாங்கள் எல்லோரும் அறிந்த விடயமாச்சே. இதை நீங்கள் வேற சொல்லவும்தான் வேண்டுமா என்ன‌?

    Reply : 0       0

    vallarasu Sunday, 19 May 2013 07:57 AM

    ஐயா அமைச்சரே... பொதுபல சேனா ப‌ற்றி நீங்கள் சொன்ன கருத்து ஒரு சாதாரண படிக்காதவனின் கருத்துபோல் உள்ளது... சரி நீங்கள் சொல்வதுபோல் முஸ்லிம் தலைவர்கள் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத ரீதியாக என்ன செய்துள்ளீர்கள்?

    Reply : 0       0

    IBNU ABOO. Sunday, 19 May 2013 04:08 PM

    அசாத்சாலியின் தைரியம் உங்களுக்கிட்ட வராதா?

    Reply : 0       0

    sooree Sunday, 19 May 2013 06:34 PM

    அமைச்சரே இது உங்கட சொந்த கருத்தா...???

    Reply : 0       0

    jawfar Thursday, 23 May 2013 10:13 AM

    இது ஒரு சுயநலவாத கருத்து....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .