
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி முதலாம் குறிச்சியில் 38 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் மதரஸதுல் இப்றாஹிமிய்யா குர்ஆன் மதரசாவின் புதிய கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த கட்டிடத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களிலுள்ள அஷ்ஷெய்ஹ் அன்சாரி தலைமையிலான பிரமுகர்கள் மற்றும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் ஆலீம் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் உட்பட பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இம் மதரசாவின் நிருவாகத்தினரால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவருக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டதுடன் இக்கட்டிடம் கட்டுவதற்கு உதவிய பலரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.