2026 மே 09, சனிக்கிழமை

சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
 
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
சடலம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து (15) மாணவர்கள் இன்று காலையில் சாரணர் பயிற்சியினைப் பெறும் பொருட்டு வித்தியாலய அதிபர் எம்.அஹமட் சாபிர் தலைமையில் வாகனேரி பொத்தானைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

ஓட்டமாவடி ஹூதா பள்ளி வாயல் வீதியைச் சேர்ந்த பதுர்தீன் தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளுள் இவர் இரண்டாவது பிள்ளையாவார்.
 
பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0

  • சமூக விழிப்புணர்வு Friday, 24 May 2013 03:07 PM

    வெள்ளிக்கிழமையாக இருந்தும் கூட முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து மாணவர்களை சாரணர் பயிற்சிக்கு கொண்டு சென்றது முஸ்லிம்கள் அனைவரும் வெறுக்கின்ற செயலாகும். சிங்கள அரசாங்கமே ஜும்மாவுக்காக அரைநாள் விடுமுறை தருகின்றபோது ஒருசில ஆசிரியர்களும் அதிபர்களும் இவ்வாறு நடந்து கொள்வது
    ஆசிரிய சமூகத்துக்கே ஓர் இழிவைத்தருகின்ற செயலாகும். எனவே இவ்வாறான ஆசிரியர்களும், அதிபர்களும் தனது வேலைகளை இராஜினாமா செய்து மக்களின் கோபத்திற்கு உள்ளாகமலும் நேர்மையான ஆசிரியர்களுக்கு இழிவு ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டும்.

    சாதுலிய வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசியரியர்களும் இந்த மாணவனின் இழப்பிற்கு முழுப்பொறுப்பும் இவர்களே கூறவேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .