2026 மே 06, புதன்கிழமை

மாணவனின் மரணம்: சாரணர் பயிற்சிக்குட்படுத்திய அதிபர், ஆசிரியர்கள் கைது

A.P.Mathan   / 2013 மே 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி மரணமான சாரண இயக்க மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைதுசெய்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
 
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து மாணவ குழுவினரை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சாரணர் பயிற்சிக்காக இன்று காலை 08.30 மணியளவில் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
 
இவ்வாறு சென்ற மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி மரணமான மாணவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரணம் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றது.

வாழைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்றழைக்கப்படும் மாணவரே உயிர் இழந்தவராவார்.
 
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் - அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நிதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைன் முன்னிலையில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
 
குறித்த மாணவரின் ஜனாஸா விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இரவு 08.00 மணியளவில் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளி வாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  Comments - 0

  • மக்களின் குரல் Saturday, 25 May 2013 10:29 AM

    இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிவிடலாம், ஆனால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிவிட முடியுமா? குறித்த அதிபரையும், ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். இந்த இடமாற்றத்தினை கல்விப் பணிப்பாளர் செய்து மற்றவர்களுக்கு இந்த இடமாற்றம் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.

    Reply : 0       0

    jesmin Sunday, 26 May 2013 03:51 AM

    இடமாற்றம் தண்டனையாக அமையாது. கல்வித் திணைக்களத்தின் முறையான அனுமதி இன்றி சென்று அப்பாவி மாணவன் ஒருவரை பலிகொடுத்த அதிபர், ஆசிரியர்களை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் பணி நிறுத்தம் செய்து எதிர்காலத்தில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவர்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று செயலில் காட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .