2026 மே 06, புதன்கிழமை

மட்டு. ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய சொத்துக்களுக்கு சேதம்

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.ரவீந்திரன்

களுவாஞ்சிகுடி, ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் உள்ள மூலவிக்கிரகங்கள், நவக்கிரகங்கள் என்பன இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, அதன்கீழ் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருந்த தங்கத்தகடுகள் திருடப்பட்டுள்ளதுடன் ஆலய சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  பொன்செல்வராசா, பி.அரியநேத்திரன், சி.யோகேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம்செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • vallarasu Monday, 03 June 2013 04:14 PM

    இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடாத்தி வருவார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .