.JPG)
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'மரம் நாட்டி சூழலைப் பாதுகாப்போம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உலக தரிசன நிறுவனம் (வேர்ல்ட் விஷன்) சிறார்களை இயற்கையோடு இணைக்கும் திட்டத்தை அமுலாக்கி வருகின்றது. இத்தகையதொரு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்றது.
இதில் நான்காயிரத்து எண்பத்திரெண்டு சிறார்களுக்கு சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கறுத்தக் கொழும்பான் மற்றும் விளாட் மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
சிறுவர்களுக்கான பிறந்தநாள் பரிசாக இந்த மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாகவும் இவை அரச அங்கீகாரம் பெற்ற சிறந்த விவசாயப் பண்ணை நாற்று மேடைகளில் உருவாக்கப்பட்டவை என்றும் வேர்ல்ட் விஷன் நிறுவன சிறுவர் பராமரிப்பு இணைப்பாளர் பிரின்ஸ் ஜேசுதாஸன் தெரிவித்தார்.
சிறார்கள் இயற்கையோடு ஒட்டிய உறவில் இணைந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கனி மரங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.