2026 மே 09, சனிக்கிழமை

களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்கப்பு,
களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் ஒனறை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது களுமுந்தன்வெளிக் கிராம மக்களிடம் கலந்துரையாடிய அவர் கிராம மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, களுமுந்தன்வெளிக் கிராமத்தின் விநாயகர் கலைக் கழகத்தினால் புதிதாகக் நிரிமாணிக்கப்பட்ட விநாயகர் கலையரங்கினையும் அவர் திறந்துவைத்தார்.

இதன்போது, எதிர்வரும் ஆண்டில் தமது நிதியொதுக்கீட்டின் கீழ் களுமுந்தன்வெளிக் கிராமத்தில் காணப்படுகின்ற வீதிப்போக்குவரத்து பிரச்சனை, குடிநீர் பிரச்சனை போன்றவற்றினை நிவர்த்தி செய்து தருவதாகவும் அவர் இக்கிராம மக்களிடம் உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .