2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாழைச்சேனை, நாவலடியில் இடம்பெற்ற வாகன  விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.

பொலன்னறுவை கிரித்தலே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கே.பண்டார ரணதுங்க என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை  மாலை வாழைச்சேனை நாவலடிப் பகுதியூடாக தனது நண்பருடன் இவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, வீதியால் வந்துகொண்டிருந்த லொறியுடன்  மோதுண்ட நிலையில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

உடனடியாக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார். 

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X