2025 மே 03, சனிக்கிழமை

'திவிநெகும' வேலைத்திட்ட முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் 'திவிநெகும' வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் 'திவிநெகும' வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும்  திவிநெகுமவின்  5ஆம் கட்ட வேலைத்திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் உட்பட பிரதேச செயலாளர்கள் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், மாவட்ட திட்டமிடல் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X