2025 மே 02, வெள்ளிக்கிழமை

யானை தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 மே 26 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, மாணிக்கப்போடி சசிகுமார், ரீ.எல்.ஜவ்பர்கான்

யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் இன்று திங்கட்கிழமை (26) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரிய மக்கள் பேரணியொன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு முன்னால் சென்றது.

வவுணதீவு பிரதேசத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னமும் இதில் பங்கேற்றார்.

இதையடுத்து பேரணியில் சென்ற பொதுமக்களினால் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை இரா.துரைரட்னம், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள் சென்று பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கையளித்தார்.

வவுணதீவு பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்குள் 300 வீடுகள் யானைகளின் தாக்குதல்களினால்  சேதமடைந்துள்ளன. 29பேர் யானை அடித்து உரிழந்துள்ளதாகவும் யானைகளின் கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் மற்றும் பயிர்ச் செய்கைகள் என்பவற்றை அழித்து சேதப்படுத்தி வருவதுடன் மிகவும் அச்சத்திற்கு மத்தியில் இப்ப்பிரதேசத்தில் வாழவேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .