2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் தாயின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று புதன்கிழமை (04) இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் எஸ்.செய்னம்பு (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் உயிரிழந்த நிலையிலேயே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .