2025 மே 01, வியாழக்கிழமை

தேன் எடுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரவெளி காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்குச்  சென்ற சித்தாண்டி,  மாவடிவேம்பு கிராமத்தைச்  சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான சி.வேலாயுதம் (வயது 54) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (15)  சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கம் போல   தேன் எடுக்கும் தொழிலுக்கு சனிக்கிழமை (14)  காலை   சென்ற இவர், மறுநாளாகியும்  வீடு வந்து சேராததால்  இவரை உறவினர்கள் தேடியுள்ளனர்;.

இதற்கிடையில் குறித்த காட்டுப்பகுதியில் இவரது  சடலத்தைக் கண்ட  மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட  இளைஞர்கள்,  அருகிலுள்ள  இராணுவத்தினருக்கு தகவல் வழங்கிய நிலையில், வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து,  வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  உறவினர்கள் சடலத்தை  அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரின்  தண்ணீர் போத்தல், தேன் வைக்கும் பாத்திரம்,  கோடாரி போன்றவை சடலத்துக்கு அருகில் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .