2025 மே 01, வியாழக்கிழமை

பொய்யான கடிதத்திற்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம்

Simrith   / 2025 மே 01 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸ் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஆங்கிலத்தில் 'CONVICTION' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதம், பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் போலி கையொப்பத்தைக் கொண்டுள்ளது என்றும், அது பொலிஸ் சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தைக் குறிக்கிறது என்றும் இலங்கை பொலிஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 

தவறான தகவல்களைக் கொண்ட இந்தக் கடிதம், இலங்கையின் கொழும்பில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் என அடையாளம் காணப்பட்ட ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தற்போது இல்லை என்றும் இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் பொலிஸ் திணைக்களத்தால் வெளியிடப்படவில்லை என்றும், இந்தக் கடிதம் பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றி அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொய்யான கடிதத்திற்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று வலியுறுத்தி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .