2025 மே 03, சனிக்கிழமை

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  ஐந்து வயதுச்  சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 28 வயதான ஒருவரை கைதுசெய்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்  தெரிவித்தனர்.

சிறுமியின் மாமன் முறையான ஒருவரே துஷ்பிரயோகம் செய்ததாகவும் நேற்று திங்கட்கிழமை மாலை சிறுமி வீட்டிலிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸில் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்தார். 

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X