2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளுடனான விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை – கரடியனாறுச் சந்தியில் நேற்று சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற கட்டாக்காலி மாடுகளுடனான இருவேறு விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன்,  மூவர்   படுகாயமடைந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில் உற்சவத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர்  கட்டாக்காலி மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானார்கள். இதில் ஆறுமுகத்தான் குடியிருப்பு துரைச்சாமி வீதியைச் சேர்ந்த சபாரெட்ணம் சரண் (வயது 26) என்பர் மரணமடைந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தான் குடியிருப்பு காளி கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் விஷ்ணு (வயது 23) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறே,  அன்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மற்றுமிருவர் கட்டாக்காலி மாடுகள் மோதி விபத்துக்குள்ளானார்கள்.  இதில் காயமடைந்த மகிழவெட்டுவான்; கிராமத்தைச் சேர்ந்த அரசரெட்ணம் கேதாரலிங்கம் (வயது 25), கரடியனாறு கிராமத்தைச் சேர்ந்த நவரெட்ணம் சிவஞானசுந்தரம் (வயது 32) ஆகியோர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அரசரெட்ணம் கேதாரலிங்கம் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X