2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,தேவ அச்சுதன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் சிறுவர் அபிவிருத்திக் குழு தலைவியுமான பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர் அபிவிருத்தி சம்பந்தமான கடந்த கால வேலைத்திட்டங்கள், பிரிந்து சென்ற பிள்ளைகளைத் தேடுதலும் குடும்பத்தினருடன் மீள் இணைத்தலும் மற்றும் சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்குதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன், சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் வி;. குகதாசன், சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ். சுதிர்ஸ்னர், பிரதேச செயலாளர்கள், யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர் பி. ரவிச்சந்திரன் மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X