2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கணினி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 18 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கணனி கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (17) நடைபெற்றது.

6 மாதங்கள் கொண்ட கணனி கற்கை நெறியினை பூர்த்தி செய்த 30 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இக்கணினி கற்கை நெறியை தொடர்ந்தும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச சபைக்கு வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தால் 05 கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வேள்ட்விஸன் நிறுவன கள நடவடிக்கைக்கான வலய முகாமையாளர் எ.அலெக்ஸ் பென்சமின், மண்முனை தென்மேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேச சபை செயலாளர் எஸ்.கிருஸ்ணபிள்ளை, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை செயலாளர் திருமதி. அருள்பிரகாசகம், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்ட  முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், நாவிதன்வெளி முகாமையாளர் பிரமசந்திரன், ஏறாவூர் முகாமையாளர் சுரேஸ் ஞானப்பிரகாசகம் மற்றும் திட்ட இணைப்பாளர்கள், மாணவர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X