2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்ததில் மீனவரை காணவில்லை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடிக்  கடலுக்கு வியாழக்கிழமை (18) காலை மீன்பிடிப்பதற்காக ஒன்பது மீனவர்கள் சென்ற படகு, கவிழ்ந்ததால்  மீனவர்  ஒருவர் காணாமல போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஏனைய எட்டு மீனவர்களும் நீந்தி கரைசேர்ந்துள்ளனர். 

ஏறாவூர், ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி சிறிதரன் (வயது 22) என்பவரே  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

கரைவலையை  கடலில் விரித்துக்கொண்டிருந்தபோது, பாரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X