2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் அறிமுகக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாண திட்டமிடல் திணைக்களத்தின் பிரதி பிரதம செயலாளர் வி.மகேந்தரராஜா,  மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரையான பாரிய அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் தயாரிக்கட்ட இந்தத் திட்டத்தை  ஆராய்ந்து, அதனை விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

விவசாயம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, பாலங்கள், மனிதவள அபிவிருத்தி உட்பட ஆறு துறைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் யு.என்.டி.பி. உம் மாவட்ட செயலகமும் இணைந்து இந்த செயற்றிட்டத்தை வடிவமைத்துள்ளது. ஐந்தாண்டு திட்டத்துக்காக 80 ஆயிரத்து 796 மில்லியன் ரூபாவை செலவிடும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X