2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் மக்கள் இடம்பெயர்வு

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,098 குடும்பங்களைச் சேர்ந்த 29,782 பேர் இடம் பெயர்ந்து 112 நிலையங்களில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (26) மாலை 4.30 மணி வரை 138,100 குடும்பங்களைச் சேர்ந்த 493,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 68,787 குடும்பங்களைச் சேர்ந்த 247,929 பேர் இடம் பெயர்ந்து நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

53,906 குடும்பங்களைச் சேர்ந்த 133,101  பேரின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X