2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ. அமைச்சு பதவிகளை ஏற்று சேவை ஆற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய ஜனாதிபதியின் தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைச்சு பதவிகளை ஏற்று இணக்கப்பாட்டு அரசியல் ஊடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவை ஆற்ற முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்  வெள்ளிக்கிழமை (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அளித்துள்ள ஜனநாயக ரீதியான தீர்ப்பை, ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற முறையில் மதிப்பளித்து அந்தத் தீர்ப்புக்கு  தலை வணங்குகின்றோம்.

மாற்றம் வேண்டும் என்ற தேசிய அலையில் தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்டு, சில யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு எம்மக்கள் அளித்துள்ள மாற்றத்துக்கான இந்தத்; தீர்ப்பானது, எம்மக்கள் எதிர்பார்க்கின்ற  மாற்றத்தை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விலும் அபிவிருத்தியிலும் ஏற்படவேண்டும் என்று நாமும் விரும்புகின்றோம்.

மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மத்தியில் எம் கட்சிக்கு மதிப்பளித்து முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எமக்காக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35,000 தமிழ் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள  மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரின் தலைமையின் கீழ் தேசிய அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X