Gavitha / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நடைபெற்று வரும் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்லுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள உள்ளூர் விமான நிலையத்துக்கு விஜயம் செய்த போது, அவரிடம் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். திறமையான பயிற்சியுடனும் திடகாத்திரத்துடனும் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எமது இலங்கை அணியினர் எதிர் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் உலக கிண்ணத்தை வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு என nதிவித்தார்.
25 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
6 hours ago