Gavitha / 2015 பெப்ரவரி 21 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதுநகரில், தனியாருக்குச் சொந்தமான மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பில் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பொருட்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதுநகர் வவுணதீவு - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள மதுபான சாலையிலேயே இந்த கொள்;ளை சம்பவம் இடம்பெற்றது. தனது மதுபானசாலையில் விற்பனைக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குடிபானம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் மோப்பநாய்கள் அடையாளம் காட்டிய வீடுகளில் இருந்து இருவரை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்களிடம் இருந்து மதுபான போத்தல்கள் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயதையுடையவர் என்றும் மற்றவர் 17 வயதுடையவர் என்றும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன். இவர்கள் வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .