2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'மட்டக்களப்புக்கு பிரதமர் வரமாட்டார்'

Gavitha   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,ஆர்.ஜெயஸ்ரீராம்   

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மிகவிரைவில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றார்கள். இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

எனவே இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரெத்தினம் சசிதரன் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவிரைவில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பேசி வருவதை நான் அறிவேன்.

எமது கட்சியினதும் கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களினதும் உத்தியோபூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்வதென்றால் அது எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளரினூடாகவே முன்னெடுக்கப்படும்.

தற்போதைய நிலையில் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய விஜயம் குறித்து எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை.

எனவே மட்டக்களப்புக்கு ரணில் விக்கிரமசிங்க மிகவிரைவில் வரவுள்ளார் என்ற தகவல் முற்றிலும் வதந்தியாகும். இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X