Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 03 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது, நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த வகையில் குருக்கள்மடம் புதைகுழி தோண்டப்பட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நீதியமைச்சருக்கு திங்கட்கிழமை (02) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று நம்பித்தான் புதிய ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம்களும் தமது பூரண பங்களிப்பைச் செய்தார்கள்.
பயங்கரவாதம் நிலவிய காலகட்டத்தில் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும் ஏறாவூர் கிராமம் அழிக்கப்பட்டது. அளிஞ்சிப்பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல், கிழக்கிலே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் பூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்து கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குருக்கள்மடம் எனுமிடத்தில்; கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.
குருக்கள் மட கடல் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் அவர்களது சடலங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து உடல்கள் புதைக்கப்பட்டதாக சொல்லப்படும் இடத்துக்கு அந்த ஆணைக்குழு நேரடியாக விஜயம் செய்தது.
பின்னர் இதன் தொடராக பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டும் இது வரையில் அந்த புதைகுழிகளைத் தோண்டுவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த புதைகுழிகளை தோண்டுவதற்கான செலவு கிட்டத்தட்ட 94 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்படடது. இந்த நிதி அரசினால் ஒதுக்கீடு செய்யப்படாமையினால் இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றது.
இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டுவதற்கென்று உருவாக்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால், இந்த ஆட்சி மாற்றத்துக்கு அரப்பணிப்புடன் பங்காற்றிய ஒரு சமூகம் நீதி தேவதையின் முன் புறந்தள்ளப்பட்டு விட்டதாக ஆகிவிடும்.
இதற்கான நடவடிக்கைள் மிக விரைவாக எடுக்கப்பட வேண்டும். அநியாயத்துக்கான நீதியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினையும் அரசு கொடுக்கவேண்டிய கடமைப்பாடு மட்டுமல்லாது இதனோடு சம்மந்தப்பட்டவர்களையும் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களுடைய உறவுகள் அங்கலாய்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் மீதான இந்த இனப்படுகொலைகள் சரியான முறையில் விசாரிக்கப்படுவதற்காக ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து தீர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, முஸ்லிம்களும் ஒரு தரப்பாக இத்தீர்வுத் திட்டத்தில் அங்கம் பெறவேண்டும்.
இந்த விடயத்தில் சர்வதேசமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்கின்றது.
இவ்வாறான நல்ல முன்னெடுப்புக்களினூடாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குரிய உரிமைகளும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
57 minute ago
1 hours ago