2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 23 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,யோ.சேயோன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன  விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

முனைத்தீவை சேர்ந்தவரும் ஒந்தாச்சிமடத்தில் வசிக்கின்றவருமான  நகைத்தொழில் செய்யும் இரு பிள்ளைகளிக் தந்தையான சி.கமலேஸ்வரன் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வேகமாக சென்றுகொண்டிருந்த  வான், வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த நபர் மோதியுள்ளது.

இந்த நிலையில், வான் சாரதி களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X