2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதிக்கொண்டதில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (23) காலை 8.00 மணியளவில் மட்டக்களப்பு - திருமலை வீதியில் சத்துக்கொண்டான் பொலிஸ் காவலரணுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த பெண் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியை மோதிய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X