Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பில்லாத தேர்தல் முறைமையையே நாம் விரும்புகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
20ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பாக அவர் விடுத்துள்ள சனிக்கிழமை (25) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறை என்பது குறித்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமைந்தாலும் அதிலுள்ள விருப்பு வாக்கு முறை என்பது பல சர்ச்சைகளை கட்சிகளுக்குள்ளும் மக்களிடையேயும் தோற்றுவிப்பதனை யாரும் மறுக்க முடியாது. அத்தோடு பல தொகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் போகும் நிலையும் தொடர்ந்து மக்களால் சுட்டிக் காட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக காணப்படும் போதும் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்படவில்லை.
கல்குடாவுக்கும் பட்டிருப்புத் தொகுதிகளுக்குமே மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பட்டது. இவ்வாறான சூழல்கள் வரும்போது, மக்களின் அடிமட்ட தேவைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துச் செல்வதற்கான மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இல்லாது போகின்றது.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தொகுதி ரீதியான மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, சிறுபான்மைக் கட்சிகளும் சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படாத சிறுபான்மையினாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தான தேர்தல் முறையினையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
புதிய தேர்தல் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக ஆராய்ந்து முன்மொழிவுகள் செய்யவும் எமது கட்சி தயாராக உள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
21 minute ago