2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குறுந்தகவல் மூலம் உள்ளூராட்சி மன்ற வரி அறவீடு

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் முதன் முறையாக குறுந்தகவலின் மூலம் உள்ளூராட்சி மன்ற வரிகளைச் செலுத்தும் வழிமுறை பற்றிய அங்குராரப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபையில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களுகான வரியை, இருக்குமிடத்திலிருந்தே நேரவிரயமில்லாது கையடக்க அலைபேசியின் மூலம் வரிப்பணத்தை செலுத்த முடியும். 

ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகர பிதாவும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாகவே இத்திட்டம சாத்தியமாகியுள்ளதென நிகழ்வின் போது நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்கு ஸ்ரீ லங்கா ரெலிகொம்  நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகர பிதாவும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா, நகரசபைத் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், ஸ்ரீலங்கா ரெலிகொம்  நிறுவன அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், நகர சபை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X