Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 11 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றி விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். கிழக்கு மாகாண சபையிலுள்ள நாங்கள் கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி பற்றி சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், இச்செயற்பாடுகள் கிழக்கிலுள்ள அதிகாரிகள் மட்டத்திலும் பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா, திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பல கசப்பான விடயங்களைக் கடந்து தற்போது மீண்டு வந்துள்ளோம். ஒருபுதிய வாழ்வை மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் தலைவர்களாக நாங்கள் இருக்க விரும்புகின்றோம். கடந்த 35 வருடகால இன்னல்களை மறந்துவிட்டு வெறுமனே செயற்பட்டுவிட முடியாது. கடந்த 35 வருடகால அனுபவங்களை தற்போது மீட்டுப் பார்ப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம். வெறுமேனே அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு பிரிக்கப்பட்ட கசப்பான உண்மைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவற்றை ஏற்று இனிமேலும் அவ்வாறான சதித்திட்டங்களுக்குள் மீண்டும் உள்வங்கப்படாமல் எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்கின்ற சமூகத்தை உருவாக்கின்ற அரசில் தலைவர்களும் அதிகாரிகளும் மாறவேண்டும்.
கிழக்கிலுள்ள அனைத்து அரச அதிகாரிகளும் இனங்களை மையமாக வைத்து சேவை செய்யக்கூடாது. கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களின் அபிவிருத்தி பற்றி மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிந்தித்துச் செயற்பட வேண்டும்,
கட்டடங்களால் மாத்திரம் எங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அனைவரினதும் மனோநிலையில் மாற்றம் வேண்டும். நாங்கள் அனைவரும் சகோதரர்களாக பிறந்தவர்கள். இந்த சகோதர பிணைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாரிய சவால் அரசியல்வாதிகளோ, மக்களோ இல்லை அதிகாரிகளின் உள்ளங்களில் மாற்றமின்மையே பாரிய சவாலாக இருக்கின்றது. கிழக்கிலுள்ள அரச அதிகாரிகளில் பலர் கடந்த 35 வருடகால கசப்பாக காலத்தை எவ்வாறு கடத்திக்கொண்டு வந்தார்களோ, அவ்வாறுதான் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago