2025 மே 17, சனிக்கிழமை

மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலத்தில் மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் இன்று  வியாழக்கிழமை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர்; அஹமட்டினால் நாட்டப்பட்டது.  

பாடசாலை அதிபர் எம்.எம்.மொஹிடீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,  ஏராவூர் வலய கல்வி அதிகாரி கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

950 மாணவர்களுடன் இயங்கிவரும் இந்த பாடசாலையில் காணப்பட்ட கட்டடப் பற்றாக்குறை சம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பாடசாலை நிர்வாகம் எடுத்துக்கூறியதை அடுத்து முதலமைச்சரால் அப்பாடசாலைக்கு 5 மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்போது இப்பாடசாலைக்கு முதலமைச்சரினால் ஒலிபெருக்கி சாதனமும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .