Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பெரியசாமி கந்தையா (70 வயது) இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் விபத்துக்குள்ளானவுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர், வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்ற நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago