2025 மே 03, சனிக்கிழமை

250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு-ஏறாவூர் மிச்நகரில் 250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொதுநல ஸ்தாபனங்கள், பாடசாலைகள், பள்ளிவாயல்களின் முக்கியஸ்தர்கள் அப்பிரதேச பொதுநல அமைப்புக்கள் இணைந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து அமைச்சர் இதற்கான நிதியை பெற்றுகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்,

'மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை எமது கிழக்கு மாகாண விவாசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால யுத்தம்  மற்றும் சுனாமி ஆகியவற்றில் துன்பங்களை சந்தித்த மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நான் இயன்ற வரை முயற்சி எடுப்பேன். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பல்வேறு வீதிகளை அபிவிருத்தி செய்து தருவதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பேன்' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் பெரோஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏறாவூர்  தபால் நிலைய அதிபர் நசீர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மகளிர் அமைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X