2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அகரம் அறிவின் அரங்கத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுவரெலியா, கந்தப்பளை அகரம் அறிவின் அரங்கம் அமைப்பின் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டமும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், கந்தப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் ஏ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.  

கந்தப்பளை அகரம் அமைப்பின் தலைவர் எஸ்.யுகபாலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.

கந்தப்பளை பிரதான வீதியில் காலை 9.00 மணிக்கு மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி, ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பாடசாலை சிறுவர்களின் நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறவுள்ளன. அத்துடன், 400 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்படவுள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானமுடைய 3 பிள்ளைகளுக்கு தலா 1,500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கான புலமைப்பரிசில்களும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள 3 மாணவர்களுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் அவர்களின் பல்கலைக்கழக கல்வி நிறைவடையும் வரையும் அவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

புலமைப்பரிசில்களுக்கான நிதியை அகரம் அமைப்பின் உறுப்பினர்களும் நலன் விரும்பிகளும் வழங்கியுள்ளதாக அமைப்பின் பொருளாளர் ஆர்.தமிழ்வாணன் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க எமது அமைப்பு திட்டமிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .