2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவமும் கௌரவிப்பும்…

Editorial   / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நு/ கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும், தரம் 6 இற்கு மாணவர்களை உள்ளீர்த்தலும் அதிபர் எஸ். விஜயகுமார் தலைமையில்  நடைபெற்றது.  

பெற்றோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் லசந்த அபேவர்த்தன, வகுப்பறை அமைப்பதற்கு உதவி வழங்கும் தலவாக்கலை லிந்தலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேமபால , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர். கணேசன் , ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். டி சந்ரு 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X