2026 மே 09, சனிக்கிழமை

dd

இரத்தினக்கல் அகழ்ந்த எண்மர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நிவித்திகல பிரதேசத்தின் வே கங்கையில், சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ​8 பேர், நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாலேயே, இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இயந்திரங்கள், இரத்தினக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர்களுக்கு, 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அவர்கள் நிவித்திகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .