எம். செல்வராஜா / 2019 மே 16 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிபிலை, மெதகமையிலுள்ள புடவைக் கடையொன்றைச் சோதனையிட்ட பொலிஸார், இராணுவ உடைக்கு நிகரான பெருந்தொகை உடைகளை மீட்டுள்ளதோடு, கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, குறித்த கடை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 12 சேட்கள், 62 காற்சட்டைகள், 23 பிளவுஸ்கள், 16 டீ சேட்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .